அரசியல் மேலும் பார்க்க

மே-18: துயரை மட்டுமே நினைவுகூர்வதற்கல்ல!

ஒட்டுமொத்த கனடா மக்கள் தொகையில் 0.7 சதவீத பங்கை மட்டுமே கொண்ட தமிழர்கள் தங்களது அரசியல் திரட்சியால் கனடா பாராளுமன்றத்தினை தமிழினப்படுகொலையை அங்கீகரிக்கச் செய்து, மே-18ம் நாள் தமிழினப்படுகொலையை அனுசரிக்கவும் செய்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் மறுகரையில் அமைந்துள்ள, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில், ஏழரை கோடி தமிழர்கள் இருந்தும் தமிழ்நாடு அரசினை மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்க கோராதது மாபெரும் வரலாற்றுப் பிழை ஆகும்.

ஒற்றைத்துவமா? சனநாயகமா?ஆளுநரும் -அரசமைப்பும் குறித்த உரையாடல்கள்! – குமரன்

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளையும் முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். அரசியல் சட்டம்,…

வானதி சீனிவாசன்

செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!

மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!

வட மாநிலத் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.

சமூகம் மேலும் பார்க்க

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2

35 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. கடுக்காய், கருப்பட்டியை பதனியில் குழைத்துக் கட்டப்பட்ட கோட்டை. பீரங்கியால் தாக்கினாலும் விரிசல் விழுமே தவிர இடிந்து விடாது. அவ்வளவு வலிமை கொண்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி, இனி இப்படி ஒரு கோட்டை கட்டி விடக்கூடாது என்று கோட்டை இருந்த பகுதியில் விவசாயம் செய்ய வைத்தனர் ஆங்கிலேயர்.

மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும்

தமிழர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள பல பண்பாட்டு கூறுகளின் சான்றுகள் நமக்கு துணைபுரிகின்றன. அந்த வகையில் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியம் காட்டும் தமிழரின் வாழ்வியலில் விடுபட்ட இடங்களை தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கிடைக்கும் சான்றுகள் இட்டு நிரப்புகின்றன.

பெரியார்

பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன்

‘கருப்புப்பிரதிகள்’ வெளியீடாக வெளிவர உள்ள என் ‘பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்’ எனும் சிறு நூலின் முன்னுரை’ – வே.மு.பொதியவெற்பன்

காணொளி மேலும் பார்க்க

வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம்

காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023 என்ன சொல்கிறது என்பதனை விளக்குகிறது இக்காணொளி.

செறிவூட்டப்பட்ட அரிசி

எல்லோரும் சாப்பிடத் தகுந்ததா செயற்கை செறிவூட்டப்பட்ட அரிசி? மறைக்கப்படும் உண்மைகள்!

செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை சத்து கலந்த அரிசியினை அரசாங்கம் ரேசன் கடைகளில் விநியோகிக்கும் முறையினை துவக்கியுள்ளது. எதிர்காலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் எனும் விவாதம் துவங்கியுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த பேசப்படாத பக்கங்களை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுசீந்திரன்.

the kerala story

ஒரு பிரதமர் இப்படி பேசலாமா? குறிவைக்கப்படும் கேரளா!

The Kerala Story திரைப்படம் குறித்து பிரதமர் மோடி சில கருத்துகளை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அதில் அவர் என்ன பேசினார் என்பதையும், அது ஏன் தவறு என்பதையும் விளக்குகிறது இக்காணொளி.

ரஷ்ய ஆயில்

ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!

ரஷ்யாவின் எண்ணெய் மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் விதித்த தடைக்கு மாறாக ஐரோப்பாவில் ரஷ்யாவின் எண்ணெய் வேறு வழிகளில் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தடை தோற்றது எப்படி என்பதை விளக்குகிறது இக்காணொளி!

பொருளாதாரம் மேலும் பார்க்க

ஊரடங்கு பெண்கள்

பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு

2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

பொதுத்துறை காப்பீடுகள்

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?

மக்களவையில் பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை (The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021) மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார்மயம்

6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்

தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

சர்வதேசம் மேலும் பார்க்க

எரிக் சோல்ஹெய்ம்

தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!

கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.

கலவரங்களால் நிலைகுலையும் தென்ஆப்ரிக்கா, இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

தென்னாப்ரிக்க நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்றுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறைகளால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

கரும்புலிகள்

கரும்புலிகள் மரபும் தமிழீழ எழுச்சியும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் எனும் படைப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லட்சியத்திற்காக உயிர்விடத் துணிந்த இப்படைப்பிரிவின் மனோபலத்தினை உலக நாடுகள் பலவும் ஆச்சரியத்தோடு பார்த்தன.

ருவாண்டா இனப்படுகொலை

‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!

பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நமீபியா இனப்படுகொலை

நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா

ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம்

சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!

இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும். மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

அமெரிக்கா சீனா தமிழீழ இனப்படுகொலை

தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!

தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.

பாலஸ்தீன்

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்? பெருந்தொற்று காலத்தில் தீவிரமாகும் மோதல்கள்

ஜெருசலேம் நகரில் வழிபாட்டாளர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால்
35-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது ஜெருசலேமில்?

சூழலியல் மேலும் பார்க்க

புவி வெப்பமயமாதல்

அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!

உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.

Forest conservation act amendment 2023

காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது.

வெப்ப அலை

வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்

கனடாவின் காலநிலை ஆய்வாளர் ‘டேவிட் பிலிப்ஸ்’ (Climatologist, David Phillips) இந்த நிகழ்வை பற்றி கூறும்போது தற்போது கனடாவின் சில பகுதிகளில் எப்போதும் வெப்பமாக இருக்கக்கூடிய மத்திய கிழக்கு நகரமான துபாயை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது என்றும், இது மேலும் இன்னும் சில நாட்களில் 47 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயரக்கூடும் என்றும் கணித்திருக்கிறார்.

துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).

துருக்கியின் மர்மாரா கடற்பகுதி (Marmara Sea) இரண்டு நாட்களாக அனைத்து செய்திகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. துருக்கி கடல் பகுதியில் இரு நாட்களாக கசடுகள் தடிமனான உறை போன்று படிந்திருக்கின்றன. புவி வெப்பமயமாதல் மற்றும்…

அண்டார்டிகா பனிப்பாறைகள்

அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்

சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவியல் மேலும் பார்க்க

ஓமைக்ரான்

கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா (Botswana) நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா சித்த மருத்துவம்

கோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்? – மருத்துவர் பாலசுப்பிரமணியன்

கோவிட்-19 என்பது கபசுரமா? என்று கேள்வி எழுப்புவோர்க்கு சில ஆதாரங்களை கூற முனைந்துள்ளேன். அதன்படி கீழே உள்ள யூகி வைத்திய சிந்தாமணி நூலில் கூறப்பட்ட கபசுரத்தின் பாடலை ஆதாரமாக எடுத்து காட்டியுள்ளேன், கபசுரத்திற்கான சித்தமருத்துவ…

வாட்சப் வழக்கு

அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்கு

ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.