புவி வெப்பமயமாதல்

அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!

உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.

மேலும் பார்க்க அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!
IPCC அறிக்கை

அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?

உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?
வெப்ப அலை

வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்

கனடாவின் காலநிலை ஆய்வாளர் ‘டேவிட் பிலிப்ஸ்’ (Climatologist, David Phillips) இந்த நிகழ்வை பற்றி கூறும்போது தற்போது கனடாவின் சில பகுதிகளில் எப்போதும் வெப்பமாக இருக்கக்கூடிய மத்திய கிழக்கு நகரமான துபாயை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது என்றும், இது மேலும் இன்னும் சில நாட்களில் 47 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயரக்கூடும் என்றும் கணித்திருக்கிறார்.

மேலும் பார்க்க வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்
அண்டார்டிகா பனிப்பாறைகள்

அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்

சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து

ஒரு நாளின் வெப்பநிலையை அறிவியல் பூர்வமாக பதிவு செய்வது என்பது கடந்த 140 வருடங்களாகத்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த வருடங்களில் 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை உள்ள 30 வருடங்களை அடிப்படை வருடங்களாக கணக்கிலெடுத்து அந்த காலக்கட்டத்தில் நிலப்பகுதியில் நிலவிய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செஸ்சியஸ் (57F பாரன்ஹீட்) அளவாக கணக்கிலெடுத்து, இந்த வெப்பநிலையே அடிப்படை வெப்பநிலையின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் பார்க்க காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து
அண்டார்டிகா

சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்

ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)

மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
டெக்சாஸ் பனிப்பொழிவு

என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!

அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…

மேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!
சுறா குஞ்சுகள்

கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்

அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் தற்போது புதியதாக ஒரு சிக்கலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுறாக்கள் வலுவிழப்பதோடு, கடல் பரப்பில் ஆரோக்கியமாக வேட்டையாடி சமநிலையை நிலைநாட்ட சுறாக்கள் தடுமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்
வெப்பநிலை உயர்வு

2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை

1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க 2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை
காலநிலை மாற்றம்

பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்

9/12/20 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (UN Environment programme’s ‘Emission Gap Report’) இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. இது ஐ.நா சார்பாக வெளியிடப்படும் அறிக்கையாகும்.

மேலும் பார்க்க பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்