எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்

பெண்கள் தொடர்பான ஜியார்ஜின் படங்களை இரு விதங்களில் பிரித்துக் கொள்ளலாம். ஓன்று, குடும்பம் எனும் அமைப்பின் அதிகாரச் சமநிலையின்மையையும் வன்முறையையும் சகிக்க முடியாமல் அதனுள் பெண்கள் மூச்சுவிடமுடியாமல் கலகம் செய்கிறார்கள். அந்தக் கலகம் மணமீறல் உறவுகளாக, மனப்பிறழ்வுகளாக, வெளியேறுதலாக முடிகிறது. இரண்டு, பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீதான வன்முறையை அவர்கள் எதிர்வில் கொலைகளாக, தற்கொலைகளாக, குற்றச்செயல்கள் எனச் சமூகம் கருதுவதற்குள் வீழ்கிறார்கள். இந்தப் போக்கில் பெண்களை மதிப்பீட்டுக்குள் வீழ்த்திவிடாமல் அவர்களின் மீதான பரிவை ஜியார்ஜின் படங்கள் கோருகின்றன. 

மேலும் பார்க்க எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்
casteism

சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா

சாதி சார்ந்து எந்த பாதிப்புக்கும் ஆளாகாதவரோ அல்லது சாதியை முற்றும் ஒழித்த பரிபூரண சமூகத்தில் வாழ்கின்றவரோ யாரேனும் உண்டா?… அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சாதியினால் துன்பத்திற்கு ஆட்பட்டிருக்க முடியாது. ஆனால், அதன் சலுகைகளை (Privilage) அனுபவித்தவர்களாக இருப்பார்கள்.

மேலும் பார்க்க சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா
மார்க்ஸ் அம்பேத்கர்

சோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்

இன்றைய நிலையில், வர்க்கத்துக்கு இணையானது சாதி, இந்துமதம்-சாதி- பார்ப்பனியம்-இந்திய அதிகார அமைப்பு என்கிற அம்பேத்கரது வலியுறுத்தலை ஏற்று அம்பேத்கரை மார்க்சியர்கள் தமது அனைத்தும் தழுவிய முழுமையான கம்யூனிசத் திட்டத்தினுள் ஏற்க முடியும். உண்மையில் இந்திய சோசலிசம் நோக்கிய மார்க்சிய வழியில் இருக்கிற தடைக்கற்களைத் தான் (Hindrance) அம்பேத்ரும் பெரியாரும் அக்கறையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் பார்க்க சோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்
ரஷ்யா-உக்ரைன் போர்

அமெரிக்கா வீசிய குண்டு இன்றும் லாவோசில் வெடிக்கிறது! உக்ரைன் பாடம் கற்குமா?

500 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஒரு வேளை ரசியா நாளை தோற்று வெளியேறினாலும் உக்ரைன் மண்ணில்தானே இந்த குண்டுகள் வெடிப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்? அதைப்பற்றியெல்லாம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மேலும் பார்க்க அமெரிக்கா வீசிய குண்டு இன்றும் லாவோசில் வெடிக்கிறது! உக்ரைன் பாடம் கற்குமா?
odisha rail accident

இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்

விபத்து நடந்த சில தினங்களிலே மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்கள் மட்டும் சரி செய்யப்பட்டு கோரமண்டல் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்திய ரயில்வேயில் இருக்கும் முக்கிய குறைபாடுகளை சரி செய்யப்படாமலே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையானது இன்னொரு விபத்து ஏற்பட்டு பல உயிர்களை பலி கொடுப்பது பற்றியான எந்த ஒரு கவலையும் ஆளும் மோடி அரசாங்கத்துக்கு இல்லை என்பதை கீழ்காணும் தரவுகள் நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மேலும் பார்க்க இந்தியாவில் ஏன் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன? ரயில்வே தனியார்மயமாக்கமும், ஒடிசா ரயில் விபத்தும்
ஆளுநர் ஆர்.என்.ரவி

அமைச்சரவையின் மீது ஆளுநரின் அதிகார வரம்பு என்ன?

மக்களவையின் முன்னாள் செயலரும் , சட்டவல்லுநருமான பிடிடி ஆச்சாரி அரசமைப்பு உறுப்புகளின் படி ஆளுநருக்கு அமைச்சரவையின் மீதுள்ள விருப்பு அதிகாரம் என்பது அரசியல் சட்டத்திற்குட்பட்டது என அரசமைப்பின் கூறுகளில் இருந்தே தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் பார்க்க அமைச்சரவையின் மீது ஆளுநரின் அதிகார வரம்பு என்ன?
அமலாக்கத்துறை

யார் கையில் அமலாக்கத்துறை (ED)? ஏன் எதிர்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது? – குமரன்

கடந்த 2014-ல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அமலாக்கத்துறை 121 அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதில் 115 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் பார்க்க யார் கையில் அமலாக்கத்துறை (ED)? ஏன் எதிர்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது? – குமரன்
new parliament

புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்தசாஸ்திரத்துக்கு என்ன வேலை?

மேலும் பார்க்க புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி
new parliament 888 seats

புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!

ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் விகிதாசார பங்களிப்பு 1971ல் 7.51 சதவீதமாக இருந்ததிலிருந்து, 2011ல் 5.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மறுபுறமோ 1971ல் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் உத்திர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை விகிதாசாரம் முறையே 15.3 மற்றும் 5.47 சதவீதமாக இருந்தது; இது 2011ல் முறையே 16.5 மற்றும் 6 சதவீதமாக மாறியிருக்கிறது.

மேலும் பார்க்க புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!
migrant labours

சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?

இந்த சூழலில் வடமாநிலத்தவர் தொடர்பான அடிப்படை சிக்கலை விவாதமாக்காமல், அரசியல் உள்நோக்கத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட வடமாநிலத்தவர் தொடர்பான வெறுப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை உற்று நோக்கக்கூடிய இடம் உருவாகியுள்ளது; உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

மேலும் பார்க்க சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?