லவ் ஜிகாத் சட்டம்

லவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறை

இசுலாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகவும், மதம் மாற்றுவதற்காக இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாகவும், இதனால் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து ஒரு மதத்துவேச பிரச்சாரத்தினை மேற்கொண்டு வந்தனர். அந்த பிரச்சாரத்தினை தற்போது சட்டமாகவே உத்திரப் பிரதேச யோகி ஆதித்யாத்தின் அரசு கொண்டுவந்துள்ளது.

மேலும் பார்க்க லவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறை
கல்வெட்டு ரவி

ரவுடிகளை ஈர்க்கும் பாஜக; யார்யார் மீது என்னென்ன வழக்கு?

கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், ரவுடி முரளிதரன், புளியந்தோப்பு தாதா அஞ்சலை, ரவுடி ஜோஷ்வா – காவல்துறையின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் இவர்கள் சமீபத்தில் பா.ஜ.க வில் உறுப்பினராக இணைந்தவர்கள். இதில் முரளிதரன் பா.ஜ.க…

மேலும் பார்க்க ரவுடிகளை ஈர்க்கும் பாஜக; யார்யார் மீது என்னென்ன வழக்கு?
அன்னை மீனாம்பாள்

பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள்

பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள்

பர்மாவின் தலைநகர் ரங்கூனில் 1904-ம் ஆண்டு, டிசம்பர் 26 அன்று வி.ஜி.வாசுதேவப் பிள்ளை, மீனாட்சி தம்பதியின் மகளாகப் பிறந்தார் மீனாம்பாள். இவரது தந்தை பர்மாவில் முக்கியாமான வணிகர் ஆவார்.
மேலும் இவரது தந்தை வாசுதேவன் 1900-ம் ஆண்டு ரங்கூனில் மதுரைப்பிள்ளை உயர்நிலைப் பள்ளியை தொடங்கி நடத்திவந்தார். அவர் நடத்திய பள்ளியிலேயே படித்துத் தேறினார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் கற்றுத் தேர்ந்தார். 1917-ம் ஆண்டு ரங்கூன் கல்லூரியில் நுண்கலை கற்றுத் தேர்ந்தார் மீனாம்பாள்.
சிவராஜ் அவர்களுடனான திருமணம்
1918 ஜூலை 10 அன்று மீனாம்பாளின் திருமணம் சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான சிவராஜுடன் நடைபெற்றது. தந்தை வாசுதேவனை போலவே கணவர் சிவாரஜும் சமுக அக்கறை கொண்டவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் வந்தார். 1926-ம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார் சிவராஜ். 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்னை மீனாம்பாள்
சைமன் கமிசனை ஆதரித்து அரசியலுக்கு வந்த மீனாம்பாள். நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தார். முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சென்னையில் மக்களைத் திரட்டும் பொறுப்பை ஏற்று அதை சிறப்பாகவும் செய்தார்.
இந்தி எதிர்ப்பையொட்டி சென்னையில் 13.11.1938-ல் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடந்தது. இதில் திருவரங்கம் நீலாம்பிகையம்மையார், தருமாம்பாள், ராமமிருதம் அம்மையார், பண்டிதை நாராயணி அம்மையார் மற்றும் இன்னபிறர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டு ஒருங்கிணைப்பில் பெரும்பங்களித்தவர் மீனாம்பாள்தான்.
சென்னை நகரில் பெண்களைத் திரட்டியதில் அவரின் பங்கு முதன்மையாயிருந்தது. மாநாட்டுக் கொடியை அவர்தான் ஏற்றினார். இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு “பெரியார்” எனும் பட்டம் மீனாம்பாள் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கு தலைமை
மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
”ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் கல்வி, ஒற்றுமை, மகளிர் முன்னேற்றம் இம்மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு. உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.
நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவ விடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.
நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொதுசாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது” என்று பேசினார்.
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாடு
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தார். 1944-ல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். அம்மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் கலந்துகொண்டார்.
மே 6, 1945-ல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்கும் அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார்.
அன்னை மீனாம்பாள் வகித்த பதவிகள்
மாநகராட்சி கவுன்சிலர்

கௌரவ மாகாண நீதிபதி

திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்

சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர்

தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்

சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்

சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர்

போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்

S.P.C.A உறுப்பினர்

நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்

தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்

அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்

சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்

விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்

காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்

மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர்

சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்

அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்

லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்

பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற அன்னை மீனாம்பாள் தன் 88-வது வயதில் 1992 நவம்பர் 30 அன்று காலமானார். அன்னையின் நினைவு நாள் இன்று.

மேலும் பார்க்க பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள்
மனநலம்

மனநல மருத்துவ சேவைக்கு ஒரு நபருக்கு 20 பைசா மட்டுமே ஒதுக்கும் இந்திய அரசு

2018-2019 ஆண்டில் 15 கோடி மக்களுக்கு தேவைப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் மனநல மருத்துவ சேவைக்காக தலா 20 பைசா மட்டுமே இந்திய அரசு மாதந்தோறும் ஒதுக்கியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க மனநல மருத்துவ சேவைக்கு ஒரு நபருக்கு 20 பைசா மட்டுமே ஒதுக்கும் இந்திய அரசு
ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்

நவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்
விவசாயிகள் போராட்டம் தில்லி

ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.

மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!
மகாவீரர் சிலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!

சித்தன்னவாசல், கழுகுமலை, சிதாரல் என்று சமண தடயங்கள் பல தமிழகத்தின் முக்கிய தொல்லியல் தளங்களாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில் புதிதாக பல இடங்களில் சமண சிற்பங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!
பொதியவெற்பன்

போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் அனுபவப் பதிவு.

மேலும் பார்க்க போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்
கவிஞர் மருதகாசி

பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசி

கவிஞர் மருதகாசி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசி
ஃப்ரட்ரிக் எங்கெல்ஸ்

எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு

இன்று மனிதன் அடைந்துள்ள அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானது மனித உழைப்பு என்ற மகத்தான உண்மையை இந்த உலகிற்கு முதன்முதலாய் சொன்னவர் மார்க்சிய அறிஞர் பிரெடரிக் எங்கெல்ஸ். மனித உருவாக்கத்தில் உழைப்பின் பங்கு என்ன என்பது குறித்து இயற்கையின் இயக்கவியல் என்ற அவரது நூலில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளை போற்றும் விதமாக அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தை பார்போம்.

மேலும் பார்க்க எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு