இந்தியாவில் குப்பை மற்றும் கழிவுகள் மேலாண்மை முறையாக நடக்காத காரணத்தினால் பிற உயிரினங்களும், வன விலங்குகளும் மோசமான நிலையில் வாழ்வைத் தொலைப்பதற்கு தள்ளப்பட்டிருக்கின்றன. நமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது.
Sanctuary Nature Foundation என்ற நிறுவனம் இவற்றை ஆவணப்படுத்தி வெளிக்கொண்டுவர இந்தியா முழுதுமிருந்து புகைப்படவியலாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் வழியே அழைப்பு விடுத்தது. இந்த பிராஜக்டிற்கு #InOurFilth என்று பெயரிடப்பட்டது. நமது குப்பைகள் நாட்டின் வன உயிரினங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தினை விளக்கும் படங்களை அனுப்புமாறு கேட்கப்பட்டது.
வந்து சேர்ந்த படங்கள் மிகவும் அதிர்ச்சிக்குரியதாக இருந்தன. Use and Throw என்ற பெயரில் நாம் வாங்கிக் குவித்து தூக்கி எரியும் பொருட்களும், குப்பைகளும் எத்தனை உயிர்களை அழிவின் விளிம்பிற்கு தள்ளிக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த படங்கள் பேசுகின்றன.

புகைப்படவியலாளர் – Bapat Daksha

புகைப்படவியலாளர் – அக்னிஸ்வர் கோஷல்

புகைப்படவியலாளர் – Mohan G

புகைப்படவியலாளர் – Prajwal KM

புகைப்படவியலாளர் – Arijit Mahata

புகைப்படவியலாளர் – Omkar Dharwadkar

புகைப்படவியலாளர் – Tharini JE

புகைப்படவியலாளர் – Rishikesh Lande

புகைப்படவியலாளர் – SuketuKumar Purohit

புகைப்படவியலாளர் – Santosh Nimbalkar

புகைப்படவியலாளர் – Anirban Roy Chowdhury

புகைப்படவியலாளர் – Tirth Vaishnav

புகைப்படவியலாளர் – Vaidehi Gunjal

புகைப்படவியலாளர் – Soumen Bakshi
நன்றி – Scroll.in