தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்

தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 

ஆறு ஆண்டுகளாக தார் பாலைவனத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் உயிர்ச்சூழல் பல்வேறு ஆபத்துகளை சந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏராளமான புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். 

பல்வேறு அரிதான வேறெங்கும் காணக்கிடைக்காத தாவர மற்றும் விலங்கின வகைகள் தார் பாலைவனத்தில் இருப்பதையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். 

உலகத்திலேயே அதிக மனிதர்கள் வசிக்கும் பாலைவனப் பகுதியாக தார் பாலைவனம் இருக்கிறது. திட்டமிடப்படாத கட்டுமானங்கள், நிலத்தை பயன்படுத்தும் முறைகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் மாற்றங்கள் போன்றவை இப்பகுதியின் உயிர்ச்சூழலுக்கு முக்கிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

கோபிந்த் சாகர் பரத்வாஜ் எடுத்துள்ள முக்கிய புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.

பாலைவனத்தில் வசிக்கக்கூடிய சிங்காரா எனும் மான்வகை ஒன்று மணல் மேட்டின் மீது எச்சரிக்கையுடன் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
தார் பாலைவனத்தில் காணப்படும் அரிய வகை யூரேசியன் வகையைச் சேர்ந்த ராஜாளி கழுகுகள். இவ்வகை கழுகுகள் 9 இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 7 இனங்கள் தார் பாலைவனத்தில்தான் வசிக்கின்றன.
தார் பாலைவனத்தில் தடங்களைப் பதித்துக் கொண்டே நடந்து செல்லும் சாண வண்டு. 10 இனத் தொகுதிகளைச் சேர்ந்த 73 சிற்றினங்கள் வகையிலான சாண வண்டுகள் தார் பாலைவனத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
Tephrosia falciformis எனப்படும் பட்டாணி குடும்ப வகையைச் சேர்ந்த கடினமான மலர் புதர்
ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் காணப்படும் இந்திய பாலைவன நரி
நெருப்புக்கோழி போன்ற உருவமைப்பு உடைய கிரேட் இந்தியன் பஸ்டார்ட் எனும் பெரிய பறவையினம். இந்த பறவையினம் அழியக் கூடிய நிலையில் உள்ள இனமாகும். இதன் கடைசி உயிரினங்கள் தார் பாலைவனத்தில் தான் உள்ளன.
ஆழமாக உள்ள கிணற்றிலிருந்து நீரை எடுப்பதற்காக இரண்டு கழுதைகளை கட்டி இழுக்கும் முதியவர் ஒருவர்
காற்றாலை சக்கரத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கும் கிரேட் இந்தியன் பஸ்டார்ட் பறவை. அழியக்கூடிய நிலையில் உள்ள இப்பறவையின வகைகள் உயர் மின்பரிமாற்ற கம்பிகளாலும், காற்றாலை பிளேடுகளாலும் ஆபத்துகளை சந்தித்து வருகின்றன.
Arnebia hispidissima எனும் முக்கியமான மூலிகைத் தாவரம். இது சாயம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
முதுகுத் தண்டைப் போன்ற தோற்றமுடைய வாலைக் கொண்ட அரிய வகை பல்லிகள் இரண்டு பிண்ணிப் பிணைந்திருக்கின்றன. இவை தார் பாலைவனத்தின் திட்டுகளில் காணப்படுகின்றன.

புகைப்படங்கள்: நன்றி – Mongabay India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *