கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜீலை மாதம் 1-ம் தேதி அதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் பைப்லைன் வெடித்தது, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் பார்க்க நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்Day: July 4, 2020
ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?
இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?