பிரிட்டனிடம் 1500கோடி இழப்பீடு வாங்கி தந்த தமிழன் ஆர்.கே.சண்முகம் செட்டியார்

ஆர்.கே.சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்தவர் தமிழராகிய ஆர்.கே.சண்முகம் அவர்கள்தான். உலக வங்கி துவக்கப்பட்ட கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றினார். வெள்ளையர்களிடம் சண்டையிட்டு இழப்பீடாக இந்தியாவிற்கு 1500 கோடி வாங்கித் தந்தார். தமிழிசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இப்படி பன்முக சிறப்புகளைக் கொண்ட ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய விரிவான அரிய தகவல்களைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க பிரிட்டனிடம் 1500கோடி இழப்பீடு வாங்கி தந்த தமிழன் ஆர்.கே.சண்முகம் செட்டியார்
இந்து அறநிலையத் துறை

கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?

தமிழ்நாட்டின் கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டிப் பணத்தில் கோவில்களை சீரமைக்கலாம் என்று ஒரு திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை பல்வேறு காரணங்களை சொல்லி பாஜக எதிர்த்து வருகிறது. கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா? உங்கள் கேள்விகளுக்கு இக்காணொளி விடையளிக்கிறது.

மேலும் பார்க்க கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?
அதானி துறைமுகம்

மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?

நாம் எல்லோரும் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த 3 கிராம் போதைப் பொருட்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதானி துறைமுகத்தில் 21,000 கோடி முதல் 2 லட்சம் கோடி வரையிலான தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு போதைப் பொருட்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டதில்லை. ஒட்டுமொத்த இளைஞர்களையும் சீரழிக்கும் இந்த கடத்தல் பற்றி ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசுவோம்.

மேலும் பார்க்க மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?
பி.எம்.கேர்ஸ்

PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?

கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.

மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
ஜெனரல் இன்சூரன்ஸ்

கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி! ஹெல்த் இன்சூரன்ஸ் இனி காஸ்ட்லி

General Insurance நிறுவனங்கள் எனப்படும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த திருத்தம் குறித்த விளக்கங்களையும் அதனால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி! ஹெல்த் இன்சூரன்ஸ் இனி காஸ்ட்லி
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற QUAD நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த 60 கோடி தடுப்பூசியை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய அக்கூட்டத்தில் பேசப்படுவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த தடுப்பூசி குறித்தும், மோடியின் பயணம் குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா
கன்னியாகுமரி மலைகள்

கன்னியாகுமரி மலைகளை உடைப்பது இவர்கள்தான்!

கன்னியாகுமரியின் மலைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு கேரளாவில் விழிஞ்சியம் துறைமுகக் கட்டுமானத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது. கன்னியாகுமரி கனிம வளக் கொள்ளை குறித்து விளக்கும் காணொளி.

மேலும் பார்க்க கன்னியாகுமரி மலைகளை உடைப்பது இவர்கள்தான்!
ஃபோர்ட்

Ford கம்பெனி மூடப்படுவதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

Ford India கார் நிறுவனம் இந்தியாவில் சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் இரண்டு Plantகளை இயக்கி வந்தது. இந்தியா முழுதும் நிரந்தரப் பணியாளர்களாக மட்டும் 10000 பேர் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 4000 பேர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுபவர்கள் என்று 40000க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தைச் சார்ந்து உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது 40000 பேரின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் பார்க்க Ford கம்பெனி மூடப்படுவதற்கு என்ன காரணம்? யார் காரணம்?
வ.உ.சி

வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கிய கதை | கோரல் மில் போராட்டம்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தலைவரான வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை வாங்கும்போது எவ்வளவு கடினப்பட வேண்டியிருந்தது என்ற கதை பலருக்கும் தெரியாது. வ.உ.சி கப்பல் வாங்கிய கதையையும், அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த கோரலில் போராட்டத்தினையும் விளக்கும் காணொளி.

மேலும் பார்க்க வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கிய கதை | கோரல் மில் போராட்டம்
காளை

இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!

காளை மாடுகளே பிறக்காதபடி மாட்டின் விந்தணுவிலேயே பிரித்து அழிக்கும் அமெரிக்க தொழில்நுட்பத்தினை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காளைகள் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றுவதைத் தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. நாட்டு மாட்டு இனங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இந்த தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கும் காணொளி.

மேலும் பார்க்க இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!