வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சென்னையில் 150 முதல் 200 மி.மீ அளவிலான மழை பொழிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களும் மழைப்பொழிவினை சந்தித்துள்ளன. மதுரை, தேனி மற்றும் தென்காசியின் சில பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது.
2017-ம் ஆண்டிற்குப் பிறகு 24 மணிநேர கால அளவில் அதிக மழை தற்போது பெய்திருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Official readings are coming !! DGP Office Myalpore records 178 mm, Redhills 128 mm. More to come.
This is the highest 24 hrs rainfall in Chennai city since November 2017.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) October 29, 2020
2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். அதன்பிறகு 2017-ம் ஆண்டு 116.4 மி.மீ மழை பெய்தது. தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது. 1969-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பெய்த 297.7 மி.மீ என்ற அளவே சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிக மழையின் அளவாகும்.
இன்று முழுவதும் இந்த மழைப்பொழிவு தொடரும் என்றும், நாளை காலை வரை தொடர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai to see more rains till evening. NEM starts with a Bang with 100’s in KTC, Tuty and Ramanthapuramhttps://t.co/SnS8WG01sd
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) October 29, 2020
அடுத்த சில மணிநேரங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பொழிய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளமாக நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளில் நல்ல நீர்வரத்து ஏற்டத் தொடங்கியிருக்கிறது.
Rainfall triggers water logging in parts of Chennai. IMD predicted 'generally cloudy sky with heavy rain' in the city today.#ChennaiRainspic.twitter.com/b2cgW7e0iT